மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், வரைவுத் திட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் மனு மீது முடிவு எடுக்கும் வரை அணை திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், மேகதாது அணைக் கான வரைவு அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற நீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.