மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
நடை திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் பத்கர்கள் பதினெட்டாம் படி அருகே குவிந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகரவிளக்கு விழாவை திங்கள் காலை 3.30 மணிக்கு நெய் அபிஷேகத்துடன் துவங்குகிறது.
14ம் தேதி மகரவிளக்கு அன்று மாலை திருவாபரணம் அணிவித்து தீபாராதனையும் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
பின்னர் 20-ஆம் தேதி சபரிமலை கோயில் நடை மீண்டும் சாத்தப்படும்.