இன்றைய பஞ்சாங்கம்: ஏப்.21
ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை ~ 8 (21.4.2024 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ க்ரோதி வருஷம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ சித்திரை மாஸம் { *மேஷ மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 2.30வரை த்ரயோதசி பின் சதுர்த்தசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 6 24 pm வரை உத்திரம் பின் ஹஸ்தம்
யோகம் ~ வியாகதம்
கரணம் ~ கௌளவம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.03
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ த்ரயோதசி
இன்று ~ ப்ரதோஷம்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (21-04-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : சிந்தனை அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
மனதில் நேர்மறையான சிந்தனை மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
கிருத்திகை : சிந்தனை மேம்படும்.
ரோகிணி : ஏற்ற, இறக்கமான நாள்.
மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திருப்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.
திருவாதிரை : தாமதமான நாள்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான திட்டங்களை உருவாக்குவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : திருப்திகரமான நாள்.
ஆயில்யம் : மந்தத்தன்மை விலகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
கருத்துகளை வெளிப்படுத்தும்போது கவனம் வேண்டும். மற்றவர்களின் மூலம் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். தாய்வழியில் ஆதரவான சூழல் அமையும். துரித உணவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆடை, ஆபரணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கனிவு வேண்டிய நாள்.
அஸ்தம் : புரிதல் வேண்டும்.
சித்திரை : கவனமாக செயல்படவும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய முடிவுகளில் பலமுறை சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : அலைச்சல் உண்டாகும்.
சுவாதி : சிந்தித்து முடிவெடுக்கவும்.
விசாகம் : வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளின் மூலம் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம் : குழப்பங்கள் குறையும்.
கேட்டை : தெளிவு உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
வெளியூர் தொடர்பான வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமியார் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : இழுபறிகள் குறையும்.
உத்திராடம் : மதிப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆதரவு மேம்படும்.
திருவோணம் : அலைச்சல் உண்டாகும்.
அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறுவது நல்லது. நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
சதயம் : ஆலோசனை பெறவும்.
பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : ஆதாயம் உண்டாகும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•à®³à¯ உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response