கடந்த 2017-18 ஆம் நிதியாண்டுக்கான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய பல்வேறு வடிவங்கள் உள்ளன. இதில் ஆண்டு முழுவதற்கும் ஒரே கணக்கு தாக்கல் செய்யும் படிவம் 9 உள்ளது. இதை அனைத்து ஜிஎஸ்டி வரம்புக்கு உள்ள நபர்களும் தாக்கல் செய்வது அவசியம்.
2017 -18 ஆம் நிதியாண்டுக்கான அவகாசம் வரும் 31ம் தேதி முடிவதாக இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது..
இதுகுறித்து ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறியபோது… ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய படிவம் 9 பயன்படுத்தப்படுகிறது! ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு கீழ் வரவு செலவு உள்ள அனைத்து வணிகர்களும் படிவம் 9 தாக்கல் செய்ய வேண்டும்!
மொத்தம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வரவு செலவு உள்ள நிறுவனங்கள் படிவம் 9 ஏ மற்றும் 9சி தாக்கல் செய்ய வேண்டும்.
31ஆம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்தது இந்த நிலையில் இந்த அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டித்து ஜிஎஸ்டி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது என்று கூறினர்.