February 22, 2026, 10:49 PM
27.3 C
Chennai

சினிமா துறையில் பெண்கள் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள்?: அவந்திகா ஷெட்டி

Avantika Shetty actress - 2026

பெங்களூரு:

சினிமா துறையில் பெண்கள் உண்மையில் பாதுகாப்பாகவா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான பிரச்னையை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் கன்னட நடிகை அவந்திகா ஷெட்டி.

 

கன்னடத்தில் வெளியான ரங்கீதா ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் அவந்திகா ஷெட்டி. இவரை கன்னட பட அதிபர் கே.சுரேஷ் தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தில் இருந்து திடீரென அவந்திகா ஷெட்டி நீக்கப் பட்டார்.

இது குறித்து பட அதிபர் கே.சுரேஷ் கூறியபோது, “ராஜூ கன்னடா மீடியம் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நான் தயாரிக்கும் புதிய படத்துக்கு நடிகர் – நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட அனைவரையும் தேர்வு செய்தேன். படத்தில் கதாநாயகியாக நடிக்க அவந்திகா ஷெட்டியை தேர்வு செய்தேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை. வேண்டும் என்றே படக்குழுவினரிடம் தகராறு செய்கிறார். யாருடைய பேச்சையும் அவர் கேட்பதில்லை. இதனால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார்.

ஆனால், இது குறித்து கன்னட திரைப்பட வர்த்தக சபையில் நடிகை அவந்திகா ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்…

முதல் நாளில் இருந்தே பிரச்னை தொடங்கிவிட்டது. அவர்கள் என் நடிப்புத் திறமையின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தேன். ஆனால் அதை தள்ளிவிட்டு, நான் படப்பிடிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனால் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காரணங்கள் சொல்லி பிரச்னைகள் முளைத்தன. போட்ட காசோலை திரும்பியது குறித்து கேட்டேன். தயாரிப்பாளரின் பாலியல் தொல்லை. அவரிடம் தகராறில் ஈடுபட்டேன். ஆனால், என் நடிப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி நீக்கியுள்ளார்கள்… என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories