சென்னை:
தமிழகம், புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஏற்கெனவே அறிவித்தபடி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வு துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
tamil-nadu-sslc-results-announced-today