நடிகை வனிதா விஜயகுமார் மீது குழந்தை கடத்தல் புகா

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

vanitha vijayakumar - 2026

சென்னை:

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எனக்கும் வனிதாவுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்து பெற்றோம். எங்களது குழந்தை ஜெய்நிதா, என் வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லும் வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை ஜெய்நிதாவை என் அனுமதி பெற்று அழைத்துச் சென்றார். ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து என்னிடம் சேர்க்கவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. எனவே வனிதா மீது குழந்தையைக் கடத்திய பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று தெரிவித்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

 

Related articles

Recent articles

spot_img