சென்னை:
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தனது குழந்தையை தானே கடத்திவிட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்த்ராஜ் நேற்று ஆந்திர மாநில காவல்துறையில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், எனக்கும் வனிதாவுக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்து பெற்றோம். எங்களது குழந்தை ஜெய்நிதா, என் வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லும் வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை ஜெய்நிதாவை என் அனுமதி பெற்று அழைத்துச் சென்றார். ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து என்னிடம் சேர்க்கவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் பதிலில்லை. எனவே வனிதா மீது குழந்தையைக் கடத்திய பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்… என்று தெரிவித்தார்.