இருதய சிகிச்சை இலவசமாக அளிக்கும் சத்ய சாய் மருத்துவமனை

Published:

satyasai heart hospital rajkot - 2026

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை, ராஜ்கோட் “பணமே இல்லாமல் இருதய சிகிச்சை” என்று பிரபலமாக உள்ளது, பணம் செலுத்தும் இடம் என்பதே இந்த மருத்துவமனையில் இல்லை.

ஒரு இருதய அறுவை சிகிச்சைக்கு, மூன்றிலிருந்து நான்கு இலட்சங்களுக்கிடையே செலவு ஆகும் என்று, நாம் அனைவரும் அறிவோம் ,

ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனை, ராஜ்கோட், கடந்த 17 ஆண்டுகளாக இலவசமாக எல்லா இருதய நோய்களையும் குணப்படுத்தி வருகிறது.

80 படுக்கைகள் கொண்ட, இந்த மருத்துவமனையில் ஏற்கனவே பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சோதனை செய்து உள்ளனர், மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த இருதய அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டு உள்ளது

தன்னலமற்ற அதே சேவை தீர்மானத்தோடு ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை இப்பொழுது கஷின்ரா,, அகமதாபாத்தில் , விரைவில் துவங்க போகிறது

இந்த புதிய மருத்துவமனையில், இருதய பிரச்சினைகளை கொண்ட 3 முதல் 18 வயது, குழந்தைகளுக்கு, இலவச அறுவை சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்படும்

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்த மருத்துவமனையில் சமீபத்திய மற்றும் நவீன இயந்திரங்கள், அனைத்து வசதிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளன .

310 படுக்கைகள் வசதியுடன், வருடத்திற்கு சுமார் 3000 இருதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்ய போகிறார்கள் .

இந்த மருத்துவமனையின் சேவை தேவைப்படும் இருதய நோயாளிகளுக்கு வழிகாட்டுவதன் மூலம், நீங்களும் இந்த தன்னலமற்ற சேவையில் பங்கு பெற முடியும்

முகவரி :

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை

ஸ்ரீ சத்ய சாய் மார்க், களவாட சாலை, ராஜ்கோட் – 360005.

ஸ்ரீ சத்ய சாய் இருதய மருத்துவமனை
கஷின்ரா கிராமம், தாலுகா: தாசிசிரோய் , தோள்க சாலை,
மாவட்டம்: அகமதாபாத் – 382210
தொலைபேசி: 94260 58897/ 99250 34534
மின்னஞ்சல்: saihospital@gmail.com

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img