புது தில்லி: தென்னிந்திய பெண்களின் தோல் நிறம் குறித்த தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கப் போவது இல்லை என்று சரத்யாதவ் கூறினார். இதற்கு அவையில் ஸ்மிருதி இராணி கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று இந்தப் பிரச்னை மீண்டும் எழுந்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெண்களின் நிறம் குறித்த சரத்யாதவ் கருத்தில் இருந்து தான் விலகி இருக்க விரும்புவதாகவும், மேலும் அவர் தனது கருத்தை வாபஸ் பெறக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் அதற்கு சரத் யாதவ், நான் பேசியது போன்ற பெண்கள்தான் (கருப்பு நிறம்) இந்தியாவிலும், இந்த உலகத்திலும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்காக ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட தலைவர்கள் போராடினார்கள். எனவே இந்தப் பிரச்னை குறித்து யாருடனும் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவது இல்லை என்றார். அவர் இவ்வாறு தெரிவித்ததும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘‘பெண்களின் தோலின் நிறம் குறித்து இவ்வாறு பேசாதீர்கள். அது தவறான தகவலை தெரிவிப்பதாக அமைந்துவிடும்’’ என்றார். அதற்கு சரத்யாதவ், ‘‘நீங்கள் யார் என்று எனக்கு தெரியும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார். இதை அடுத்து அவைத்தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, இந்த பிரச்னை குறித்து மேலும் விவாதிக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தில்லி மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை நடந்த காப்பீட்டு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், இந்தியர்கள் வெள்ளைத் தோல் மீது மோகம் கொண்டவர்கள் என்றும், திருமணத்துக்காக வெள்ளைத்தோல் கொண்ட பெண்களையே தேடுவதாகவும் கூறினார். அத்துடன், தென்னிந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள், நாட்டியத் திறமை கொண்டவர்கள் என்ற போதிலும் சிவந்த நிறமாகப் படைக்கப்படவில்லை என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தான் கூறிய அனைத்தும் நகைச்சுவைக்காக கூறப்பட்டவை என்று சரத்யாதவ் விளக்கம் அளித்தார். இருந்தபோதும் சரத்யாதவின் பேச்சு பின்னர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
சற்றுமுன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
Entertainment News
Previous article
Next article

