தமிழக அரசின் வனத்துறையில் காலியாக உள்ள பாரஸ்ட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி.
பதவி: பாரஸ்ட் அப்ரண்டிஸ்
காலியிடங்கள்: 158
கல்வித் தகுதி: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடத்தில் இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பளம்: ரூ.37700-119500
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01-08-2018.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் இந்த https://www.tnpsc.gov.in/latest-notification.html லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுத் தகவல் இந்த சுட்டியில்…
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.