குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு: மாடலிங் நடிகை பூஜா புகார்!

Pooja-Mishra-Photoshoot21 பாட்னா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை எவரோ கற்பழித்துவிட்டதாகவும், தன் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாகவும் மாடலிங் நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை அளித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த மாடல் நடிகை பூஜா மிஸ்ரா. இவர் பிக் ஸ்விட்ச், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் நடனம் ஆடியுள்ளார். கடந்த 2003ல் பாலிவுட் படமான தில் க ரிஷ்டா வில் சாஜன் சாஜன் என்ற பாடலில் ஆடி நடித்து புகழ்பெற்றார். பின்னர் கலர்ஸில் சல்மான் கான் நடத்திய ‘பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ’மூலம் புகழ்பெற்றார். 2010ல் யுடிவி பிந்தாஸில் பெரிய ரியாலிடி ஷோவில் நடித்தார். பிகார் மாநிலம் முங்கரில் பிறந்த பூஜா, பி4யு டிவியில் ஜப் வி டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். நட்பு, தாம்பத்யம் இவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக அமைந்த நிகழ்ச்சி இது. அண்மையில் இவர் காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றிற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் செய்ன்றார். அங்கே உள்ளா ‘ராடிசன் ப்ளூ’ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். போட்டோ ஷூட் முடிந்த பின்னர் அவரை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் சென்றுவிட்ட நிலையில் ஹோட்டலில் தான் குடித்த குளிர் பானத்தில் யாரோ மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளதாகவும், அதைக் குடித்துவிட்டு அறைக்குச் சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார். காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது நகை பணம் பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, போலீஸார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை. இது குறித்து உத்ய்புர் ஐஜி ஆனந்த் ஸ்ரீவத்ஸவா கூறியபோது, அவர் மன அதிர்ச்சிக்குள்ளான நிலையில் பேசுகிறார். தெளிவான பேச்சு இல்லை. இருந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து, அவருடன் அனைத்து விவரங்களையும் கேட்டு விசாரிக்கவுள்ளோம் என்று கூறினார். இந்தச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, இதன்பின்னணியில் சோனாக்ஷி சின்ஹாவும், அவரது அம்மாவும் உள்ளனர் என்று பூஜா புகார் கூறியுள்ளார். sonakshisinha-poojamishra  

 

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories