முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் படை பாதுகாப்பு தேவை: தமிழக அரசு பதில் மனு

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் படையினர் பாதுகாப்பே தேவை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் படையை நியமிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் மீது 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவுக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று எதிர் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்றம், 15-12-2011 அன்று வழங்கிய தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசு அதிகாரிகளுக்கு எந்த வகையான இடையூறும் ஏற்படாது என்று கேரள தலைமைச் செயலாளர் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவில்லை. அணையின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களுக்கு எதிராகவும் கேரள அரசு செயல்பட்டுவருகிறது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கேரள அரசு செயல்படுவதாகக் கூறினாலும், அதுதொடர்பான எந்த நடவடிக்கையும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. அணை பராமரிப்புக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இந்த பதிலில் கேரள அரசு கூறியுள்ளவை ஏற்புடையதல்ல. அவை அனைத்தையும் மறுக்கிறோம். எனவே முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு முன் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories