காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: அதிர்ச்சி அளித்த முஷாரப்!

Pervez Musharraf and Imran Khan - 2026

இந்தியாவுக்கு எதிராக போராட காஷ்மீரிகளுக்கு ஜிகாத் பயிற்சி அளித்தோம் என்று முஷாரப் கூறியுள்ளார் .

ஜிகாத் பயிற்சி அளித்து அவர்களை நாங்கள் ஹீரோக்கள் ஆகவே பார்த்தோம் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபரான முஷாரப் அளித்துள்ள ஒரு தேதி குறிப்பிடப்படாத பேட்டி அடங்கிய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் முஷாரப் கூறியுள்ளவை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1979ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மத தீவிரவாதத்தை நாங்கள் அறிமுகம் செய்தோம். அங்கிருந்து சோவியத் ரஷ்யாவை வெளியேற்றுவதற்காக பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு உலகமெங்கும் உள்ள முஜாகிதீன்களை வரவழைத்து பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி அளித்தோம். அவர்களுக்கு ஆயுதங்களை அளித்தோம். அவர்கள் எங்களுடைய ஹீரோக்கள். ஹக்கானி, ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் எங்களுடைய ஹீரோக்கள்.

ஆனால் அதன் பின்னர் உலக சூழ்நிலை மாறிவிட்டது. உலகம் இவர்களை வில்லன்களாகப் பார்க்கத் துவங்கியது. அதுபோல் காஷ்மீரில் இருந்து வந்த முஜாகிதீன்களை நாங்கள் வரவேற்றோம். அவர்களை ஹீரோக்கள் போல நடத்தினோம். அவர்களுக்கு பயிற்சியும் ஆதரவும் அளித்து அவர்களை முஜாஹிதீன்களாகப் பார்த்தோம். இந்திய ராணுவத்துக்கு எதிராக போராடுவதற்காக அவர்களுக்கு பயிற்சி அளித்தோம்.

அதன் பிறகு லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் உருவாகின… என்று கூறியுள்ளார் முஷாரப்.

ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சியும் உதவியும் அளித்து வருகிறது என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

இப்போது, தாம் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கூறியுள்ளது! தற்போது சர்ச்சையையும் இந்தியாவின் தரப்பில் உள்ள நியாயத்தையும் வலுவாக எடுத்துக் காட்டியுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories