April 19, 2025, 4:58 AM
29.2 C
Chennai

பரிதாபம்… நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு: இரட்டைக் குழந்தைகளோடு மரணம்!

twins
twins

நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு. இரட்டை குழந்தை களோடு சேர்ந்து மரணம் அடைந்தார்.

ஐவிஎஃப் சென்டர் சிகிச்சையால் கர்ப்பம் தரித்தார் அந்தப் பெண்மணி. இரட்டை குழந்தைகள் பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார். நிறை மாத கர்ப்பிணியான அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் குழந்தைகளோடு சேர்ந்து மரணமடைந்தார்.

திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் அந்தத் தம்பதியர் பெரிதும் மனம் வருந்தினர். இறுதியில் ஐவிஎஃப் சென்டர் சிகிச்சை மூலம் கர்ப்பம் தரித்தார் அந்தப் பெண்மணி. ஆனால் அவருடைய மகிழ்ச்சி நிறைவைச் சந்திக்காமல் பாதியிலேயே முடிந்து விட்டது. நிறைமாத கர்ப்பிணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இரு குழந்தைகளுடன் சேர்ந்து மரணமடைந்ததால் அவர்கள் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

கரீம்நகர் மாவட்டம் சிகுருமாமிடி மண்டலம் ரேகொண்ட கிராமத்தைச் சேர்ந்த ஜூப்க்க கனகய்யா, சைதாபூர் மண்டலம் எலபோதாரம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்வரூபா (38) தம்பதிகளுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆண்டுகள் கழிந்தாலும் அந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் உண்டாகவில்லை. குழந்தை பேற்றுக்காக பல கோவில் கோபுரங்களையும் மருத்துவமனைகளையும் சுற்றியும் அலைந்தும் வந்தார்கள். இறுதியில் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ வி எஃப் சென்டரில் சிகிச்சை பெற்று எட்டு மாதங்களுக்கு முன் சொரூபா கர்ப்பமானார்.

ALSO READ:  திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

ஸ்கேனிங் பார்த்த மருத்துவர்கள் இரட்டை குழந்தைகள் என்று கூறினார்கள். அதனால் அவர்களின் குடும்பம் தங்கள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்தார்கள். 8 மாதம் நிறைந்ததால் சொரூபா அண்மையில் எலபோதாராமில் உள்ள தன் பிறந்த வீட்டிற்குச் சென்றார்.

வியாழக்கிழமை இதயத்தில் வலி வந்ததால் ஹிஜூராபாத் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பிபி அதிகமானதால் ஆபத்தான உடல் நிலையோடு ஐசியுவில் சேர்த்தார்கள். சொரூபா அங்கேயே இறுதி மூச்சை விட்டார்.

குறைந்தபட்சம் குழந்தைகளையாவது காப்பாற்றுங்க என்று சொரூபாவின் கணவர் கனகய்யா டாக்டர்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதனால் சொரூபாவுக்கு ஆபரேஷன் செய்தார்கள் மருத்துவர்கள். ஆனால் அதற்குள்ளாகவே இரட்டைக் குழந்தைகளும் மரணித்து இருந்தன. அதனால் அந்த குடும்பம் தீவிர சோகத்தில் மூழ்கியது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories