‘மிஸ்ஸிங்’ என்று சமூகத் தளங்களில் கூறப்பட்ட தெலங்காணா முதல்வர்… எங்கே இருக்கிறார் தெரியுமா?

Published:

chandrasekara rao
chandrasekara rao
  • 12 நாட்களாக தனது பண்ணை வீட்டிலேயே தங்கியிருக்கிறார் தெலங்காணா முதல்வர் கேசிஆர்.
  • கேசிஆர் மிஸ்ஸிங் என்றுகூட சமூக ஊடகங்களில் பரபரப்பாக கருத்துகள் உலா வருகின்றன.
  • முதல்வர் கேசிஆர் கடந்த 12 நாட்களாக பண்ணைவீட்டில் தங்கியுள்ளார்.

கடைசியாக, ஜூன் 28-ஆம் தேதி முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கேசிஆர் ஆஜர் ஆனார். அதன்பின் தன்னுடைய பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இப்போது வரையிலும் பிரகதி பவனுக்கு அவர் வரவில்லை.

முக்கியமான அம்சங்கள் மீது பேசுவதற்கு சிஎஸ், டிஜிபி, நிகா ஆபிஸர்கள் ஆகியோரை தன் பண்ணை வீட்டுக்கு அழைத்து உரையாடுகிறார். இதற்காக பிரத்யேகமாக பண்ணை வீட்டில் ஒரு ஹால் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

செக்ரடேரியட் கட்டடம் இடிப்பதற்கு முன்னால் முன்தினம் சிஈஸ், டிஜிபி இருவரும் சுமார் 10 மணி நேரம் முதல்வரோடு ஃபார்ம் ஹவுஸ் இல் நடந்த மீட்டிங்கில் பங்கு கொண்டதாக தெரிகிறது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மிக அத்தியாவசியமான பைல்ஸ் மீது கையெழுத்து போடுவதற்கு ஆபீசர்கள் பார்ம் ஹவுசுக்கு சென்று வருகிறார்கள். மீதி ஃபைல்களை பார்ப்பதில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

லாக்டௌன் ஆரம்பித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான பைல்கள் சிஎம் ஆபிஸிலேயே தங்கி விட்டன என்று அவர்களிடம் பேச்சு நிலவிவருகிறது.

இதனிடையே இப்போதும் தெலங்காணா முதல்வரைக் காணவில்லை என்று சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img