தில்லியில் பிரதமர் மோடி சக பயணிகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார். அப்போது பிரதமர் மோடியை உடன் பயணித்தவர்கள் பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுக்காகப் பாராட்டினர்.
தில்லி கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, இஸ்கான் மைய ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி பயணமானார். இன்று இஸ்கான் -க்ளோரி ஆஃப் இந்தியா கலாசார மையத்தில் நடைபெற்ற கீதா ஆராதனா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
அப்போது, சக பயணிகளுடன் பயணியாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் மோடியைக் கண்ட பயணிகள், புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மூலம் பதிலடி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதற்காக பாராட்டினர். இந்த முடிவை மேற்கொண்டதற்காக, பிரதமரைப் பாராட்டிய பொதுமக்கள், இந்திய ராணுவத்துக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
PM Narendra Modi took Delhi metro from Khan Market metro station earlier today. He was on his way to the Gita Aradhana event at ISKCON-Glory of India Cultural Centre. pic.twitter.com/SDUfpJMxhi
— ANI (@ANI) February 26, 2019
பொதுமக்களுடன் பயணித்த போது, சிறார்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார்.
குழந்தை ஒன்றை அதன் தாயாரிடமிருந்து வாங்கிய பிரதமர் மோடி, அக்குழந்தையை தனது மடியில் அமரவைத்து அதனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்.
#WATCH: PM Narendra Modi took Delhi metro from Khan Market metro station earlier today. He was on his way to the Gita Aradhana event at ISKCON-Glory of India Cultural Centre. pic.twitter.com/aa8vkz6Iin
— ANI (@ANI) February 26, 2019