December 5, 2025, 10:27 PM
26.6 C
Chennai

இந்தியாதான் தாக்குதலே நடத்தலியே… பின்ன எதுக்கு இவ்ளோ ஆர்ப்பாட்டம் மிஸ்டர் இம்ரான் கான்!?

imran khan modi - 2025

பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக #இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது இரு நாட்டு மக்களிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதலில் மறுப்பு தெரிவித்ததாக செய்தி வெளியானது.

பாகிஸ்தான் ஊடகங்களும் இதனை ஒரு பெரிய செய்தியாகப் பகிராமல், அமைதி காத்தன. ஒரு ஊடகம் இப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை, இந்தியா தேர்தலுக்காக பொய் சொல்கிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது. இன்னொரு ஊடகம், இந்திய விமானங்கள் எல்லைப் பகுதிக்குள் நுழைந்தன, ஆனால் அவை பாகிஸ்தானின் விமானங்களைக் கண்டதும் பின்வாங்கி ஓடிவிட்டன என்று தகவல் வெளியிட்டது. தொடர்ந்து, இந்திய விமானங்கள் குண்டு வீசின. ஆனால் அங்கே எதுவும் இல்லை; உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ எதுவும் இல்லை; காலி மனையில் குண்டு போட்டுவிட்டு இந்திய விமானங்கள் சென்றன என்று ஒரு நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இப்படி பல்வேறு விதமான தகவல்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வந்து கொண்டிருக்க, இந்திய ஊடகங்களிலோ இதுதான் தலைப்புச் செய்தியானது.

terror camp - 2025

முன்னதாக, பாகிஸ்தான் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார். இந்திய விமானப்படை தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுப்பு தெரிவித்ததுடன், இந்திய விமானப்படை தாக்குதலில் பயங்கரவாதிகள் பலர் உயிரிழந்ததாக கூறப்படுவதையும் மறுத்தார். இந்திய அரசு பொறுப்பேற்ற மற்றும் கற்பனையான விஷயங்களை கூறி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இந்நிலையில், பாதுகாப்பு தொடர்பான அவசரக் கூட்டம் நடத்தியது பாகிஸ்தான். இதில், இந்தியா சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும் மீறி வந்துள்ளது என்பதை சர்வதேச மன்றங்களில் சர்வதேச அளவில் எடுத்துக் கூறப் போவதாக பாகிஸ்தான் முடிவு செய்தது.

mirage airforcestrike - 2025

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியதையடுத்து இம்ரான் கான் தலைமையில் உயர்மட்ட குழு கூடி ஆலோசித்தது. அதில் ராணுவ தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
அப்போது இந்தியா கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டைக் கடந்து, போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளது என்பதை சர்வதேச மன்றத்தில் எடுத்துக் கூறப் போவதாக முடிவு செய்யப்பட்டது!

இது குறித்த தகவல்களை பாகிஸ்தான் தெரிவித்ததும், அனைவரும் கேட்ட கேள்வி இதுதான்! இந்தியாதான் பாகிஸ்தான் மண்ணில் தாக்குதலே நடத்தவில்லையே! பின்னர் எதற்காக இப்படி அவசரக் கூட்டம், சர்வதேச மன்றம், சீனாவிடம் முறையிடல், பதில் தாக்குதல் எல்லாம் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுவருகின்றார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories