ராணுவ பாராசூட் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான தளவாடப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ராணுவத்துக்குத் தேவையான உடை, துப்பாக்கி, டாங்கிகள் மற்றும் துணைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாராசூட் தயாரிக்கும் ராணுவத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு டெய்லர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 198 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் டெய்லர் பணிக்கு மட்டும் 154 இடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன், பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டெய்லர், மெஷினிஸ்ட், பிட்டர் ஜெனரல் மெக்கானிக், கார்பெண்டர், பிட்டர் எலக்ட்ரானிக்ஸ், எக்சாமினர் குளோத்திங் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 28 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 11-17 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விளையாட்டு
FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சென்னை
ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.
Entertainment News
Next article

