ஹைதராபாத்: திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணைக்கு ஏன் உத்தரவிடப்படவில்லை? என்று ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசார் மற்றும் அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது மனித உரிமை மீறல் என்றும் போலீசார் அவர்களை முன்கூட்டியே பிடித்து வைத்து சித்ரவதை செய்து கொன்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, உச்ச நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான 3 பேர் கொண்ட மனித உரிமை ஆணைய அமர்வு, ஹைதராபாத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது. ஆணையத்தின் முன்னர், ஆந்திர அரசு சார்பில் கூடுதல் டி.ஜி.பி. வினய் ரஞ்சன் ரே ஆஜரானார். அவரிடம் மனித உரிமை ஆணைய அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. இதில் குளறுபடி உள்ளது. வருவாய்த் துறையினர் ஏன் விசாரணை நடத்தவில்லை. வருவாய்த்துறை விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை. இந்தப் படுகொலை குறித்து, ஏன் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்று கேள்விகளை எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவுசெய்ய காலதாமதம் ஆனது ஏன் என்றும் கேள்வி எழுப்பி, ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் கண்டனத்தைத் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு ஆந்திர அரசுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?
சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கட்டுரைகள்
வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!
வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே போதும் என்பார்கள்
ஆன்மிகச் செய்திகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...
இந்தியா
வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...
Entertainment News
Previous article

