விஜயவாடா கோ ஸம்ரக்ஷண சங்கம் நடத்தும் கோசாலை – மாட்டு தொழுவத்தில் ஏராளமான பசு மாடுகள் இறந்து கிடந்தன. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 110 பசுக்கள் துடித்து இறந்தன. மேலும் நூற்றுக்கணக்கான பசுக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.
தீவனம் விஷமானதே பசுமாடுகளின் இறப்பிற்கு காரணம் என்று அறியப்பட்டுள்ளது. இரவு பசுக்கள் உண்ட உணவில் எரு மருந்துகளின் அளவு அதிகமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கோசாலை முழுவதும் இதயத்தை உருக்கும் காட்சிகளாக மாறியது.
எங்கு பார்த்தாலும் பசுமாடுகள் துடிதுடித்து இறந்து கிடப்பதை கண்ட அன்பர்கள் மனவேதனை அடைந்தனர். ஆட்சியர் ஏஎம்டி இந்தியாஜ், அமைச்சர் வெலம்பல்லி ஸ்ரீனிவாசராவ், எம்எல்ஏ வசந்த கிருஷ்ணபிரசாத், ஜாயிண்ட் கலெக்டர் மாதவி லதா முதலானோர் சனிக்கிழமை காலை அவசர அவசரமாக கோசாலைக்குச் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
அதேநேரம் நோய் நிவாரண வாகனங்களில் வந்து சேர்ந்த கால்நடை பணியாளர்கள், உயிர் இழந்த பசு மாடுகளுக்கு உடற்கூறாய்வியல் செய்து அருகிலேயே பெரிய குழி தோண்டி அவற்றைப் போட்டு மூடினர்.
மாநில விலங்கு, மீன் சந்தைத் துறை அமைச்சர் மோபிதேவி வெங்கட ரமணாராவு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்துக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் பசுமாடுகள் இறப்பு குறித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்து அறிக்கை வெளிவந்ததும் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.