ஆக.18ல்… கூண்டோடு பாஜக.,வில் தஞ்சமடையும் தெலுகுதேசம் கட்சியினர்!

Published:

chandrababu naidu - 2026

ஆகஸ்ட் 18 அன்று தெலங்கானாவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினர் கூண்டோடு பாஜக.,வில்  சேர உள்ளனர்.

ஆபரேஷன் ஆகர்ஷண்:- தாமரையில் தஞ்சம் புகுகின்றனர் தெலுகு தேசம் கட்சித் தலைவர்கள். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பிஜேபியில் சேர்வதற்கு மேடை தயாராகிவிட்டது.

18ஆம் தேதி பாஜக., தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் மஞ்சள் துண்டை தூக்கிவிட்டு காவித் துண்டைப் போர்த்திக் கொள்ளப் போகிறார்கள்.

தெலங்கானாவில் தெலுகு தேசம் கட்சியை முழுவதுமாக துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு பச்சைக் கொடி காட்டி உள்ளது. அதனால் தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை பெரிய அளவில் சேர்த்துக் கொள்வதற்கு அனைத்தும் தயாராகி விட்டது.

01 June24 BJP - 2026இந்த மாதம் 18-ஆம் தேதியிலிருந்து பெரிய அளவில் தலைவர்களும் உறுப்பினர்களும் பாஜக., தேசிய செயல் தலைவர்   ஜே.பி.நட்டா முன்னிலையில் சேர உள்ளார்கள். தெலுகு தேசம் தேசியத் தலைவர் மாநிலன்களவை உறுப்பினர் கரிகிபாடி மோஹனராவு மற்றும் பல தலைவர்கள் தாமரை மலரை கைகளில் ஏந்த உள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த நிகழ்ச்சிக்காக நாம்பல்லி எக்ஸிபிஷன் கிரவுண்டில் மிகப்பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சென்ற தேர்தலில் தெலுகுதேசம் கட்சியில் நின்று தோற்ற பல தலைவர்கள் பிஜேபி பக்கம் திரும்பி உள்ளதாக தெரிகிறது.

எல் தீபக் ரெட்டி, ரஜனீகுமாரி, ரங்கா ரெட்டி, முன்னாள் அமைச்சர் கோனேரு நாகேஸ்வரராவின் புதல்வர் கோனேரு சின்னி முதலானோர் பிஜேபியில் சேர உள்ளார்கள். தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிப்பதே முக்கிய இலக்கு என்று காய் நகர்த்திக் கொண்டுள்ள பிஜேபி அதற்கு ஏற்ப  இப்போது சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு மாற்றாக பிஜேபி கட்சியை முன்னிறுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார் பிஜேபி தேசிய தலைவர் அமித் ஷா!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img