தமிழகத்திற்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு லண்டன் சென்றடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெத்தாயின.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கோட் சூட் அணிந்து பங்கேற்றனர்.