சென்னை:
தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா கடந்த 12ஆம் தேதி கடிதம் வாயிலாக ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா தில்லியில் பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னர், அதனை மீட்க எடுத்த முறைகேடான நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பாக இருந்தார் புகார் எழுந்தது. இதையடுத்து தில்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 12ஆம் தேதியே அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக இன்று அறிவித்தது.