தமிழக அரசின் ஆலோசகர் பதவியில் இருந்த பவன் ரெய்னா ராஜினாமா ஏற்பு

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை:

தமிழக அரசின் ஆலோசகர் பதவியை பவன் ரெய்னா கடந்த 12ஆம் தேதி கடிதம் வாயிலாக ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை இன்று அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக அரசின் ஆலோசகராக பவன் ரெய்னா தில்லியில் பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பவன் ரெய்னா தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டார். இவர் தமிழகம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பாலமாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இரட்டை இலை முடக்கப்பட்ட பின்னர், அதனை மீட்க எடுத்த முறைகேடான நடவடிக்கைகளில் அவருக்கு தொடர்பாக இருந்தார் புகார் எழுந்தது. இதையடுத்து தில்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பவன் ரெய்னா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கடந்த 12ஆம் தேதியே அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளதாக இன்று அறிவித்தது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

Related articles

Recent articles

spot_img