
சென்னை:
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. தமிழர் முன்னேற்றப் படையினர் எனும் அமைப்பினர் இன்று காலை ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அந்த அமைப்பினர் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினியின் உருவபொம்மையை எரித்து, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லி, ரஜினிக்கு எதிராக கோஷங்கள் இட்டு, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பு பேசிக் கொண்டிருக்க, அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே இது குறித்து தனது பேச்சில் குறிப்பிட்ட் ரஜினி காந்த், சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம் குறித்து வருந்துவதாகக் கூறினார்.


