தெலங்கானாவில்… ராச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட் எல்லையில் உள்ள எல்பி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஞாயிறு அன்று முதல் முத்தலாக் வழக்கு பதிவானது.
போலீஸார் கூறியது என்னவென்றால்… மகபூப்நகர் மாவட்டம் மல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமி ராஜேந்தர் நகர் பிஹெச்சி டிபி பிரிவில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். 2016 ல் இவருக்கு ஹஸ்தினாபுரம் ஓம்கார் நகரைச் சேர்ந்த ஹஸீனாவோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
ஆனால் கடந்த சில நாட்களாக அப்துல்சமியுடன் சேர்ந்து கொண்டு, அவருடைய தாய் அன்வரீ பேகம், நாத்தனார் பர்வீன் ஆகியோர் மேலும் வரதட்சனை வேண்டுமென்று ஹசீனாவை கொடுமை செய்துள்ளனர்.
இதனால் ஹசீனா 2019 செப்டம்பரில் ராஜேந்தர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பெரியவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகு அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் குடி மாறினார்கள்.
ஆனால் கடந்த மார்ச் 25 ஹசீனாவோடு சண்டையிட்ட சமி மனைவிக்கு தலாக் கொடுத்து அவரை பிறந்த வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் ஹசீனா கடந்த ஜூன் 26 வனஸ்தலிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் இந்த மாதம் 13ம் தேதி எல்பிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினார்கள்.
இதன்படி எல்பிநகர் போலீசார் முத்தலாக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அப்துல் சமியை கைது செய்து விசாரிப்பதாக கூறினார்கள்.