ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published:

திருவாடானை அருகே திருவொற்றியூரில் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று வகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாடானை அருகே திருவொற்றியூரில் சிவகங்கை சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக அனுக்கை,விக்னேஸ்வர பூஜையுடன் இன்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாள் இரவும் கேடகம் பல்லக்குபூதம் அன்னம் நந்தி சிம்மம் வெட்டும் குதிரை காமதேனு ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 15ஆம் தேதி வெள்ளிகிழமை நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
IMG 20220407 WA0041 - 2026

Related articles

Recent articles

spot_img