ஏப்.29ல் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் தமிழக மீனவப் பிரதிநிதிகள்: முரளிதர் ராவ் தகவல்

Published:

சென்னை: மீன்வர் பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், ஏப்.29ல் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கின்றனர் என்று கூறினார் பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ். சென்னையில் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முரளிதர் ராவ், தமிழக மீனவர்கள் பிரச்னையை பா.ஜ.க. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில், தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக, தமிழக பா.ஜ.க. சார்பில் தில்லியில் 27-ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. இதில், தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இறுதியில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, 29-ஆம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசுகின்றனர்.. என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img