கோல்கத்தா காங்கிரஸுடன் இனி கூட்டணியில்லை, ஆனால் பிரச்னை வந்தால் கை கோத்து செயல்படுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சீதாராம் யெச்சூரி முதல் முறையாக மேற்கு வங்கத்துக்கு வந்தார். அப்போது, கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அடிப்படை சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே நேரம் நாடாளுமன்றத்தில் பிரச்னைகளின் அடிப்படையில் காங்கிரசுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு உள்ளது. மோடியின் அரசு இந்துத்வ சக்திகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பொருளாதாரக் கொள்கைகளில் தாராளம் காட்டி, மக்கள் விரோதமாக நடந்து கொள்கிறது. எனவே மோடி அரசுக்கு எதிராக போராட விரும்பும் அனைத்து மதசார்பற்ற எதிர்க்கட்சிகளும் எங்களுடன் சேர்ந்து போராடுவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.. என்று கூறினார்.

