“ஆத்துப் பாலக் கச்சேரி”

“எலேய்…அது யாரு..கோமதிநாயகம் புள்ளயா…எங்கலே ஆத்துக்கு குளிக்கவா….இங்க நாங்க நல்லுபேரு ஒக்காந்திருக்கோமுல்லா…காண்ணுல தெரியலையா…அதுக்குள்ளாலயால மறந்திட்டாயா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையா…வேலைக்குப் போணும்…அதான் ஓடுதேன்…ஒங்கள மறப்பேனா”
 
“அட…அப்படி போடுறா…இந்த நாட்டுல நாமெல்லாம் எல்லாத்தையும் மறந்திட்டிலா திரியுதோம்….”
 
“ஆசிரியரே….எங்கவே கயத்த நீட்டுதீறு”
 
“ஆமா…பூச்சி மருந்து ஊழல மறந்துட்டோம், கோதுமை பேர ஊழல மறந்துட்டோம், வீராணம் ஊழல மறந்துட்டோம், விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் ஊழல் விஞ்ஞானி என்று “சர்க்காரியா கமிஷன” காட்டி என்ன உள்ள தள்ளிடாதீங்கனு அம்மா கால்ல..அதான் இந்திராகாந்தி கால்ல விழுந்தத மறந்துட்டோம், அந்தம்மா செய்த அவசரச்சட்டக் கொடுமைகள மறந்துட்டோம், அந்த அம்மாவ மதுரைல தி.மு.க. தாக்கியத மறந்துட்டோம், அப்ப அந்த அம்மா புடவைல இருந்த “ரத்தத்துக்கு” நம்ம கலியுக டாக்டர் கலைஞரு சொன்ன விளக்கத்த மறந்துட்டோம்,காமராஜர மறந்துட்டோம், காமராஜர் இறந்த பொழுது, “காமராஜர் என்னைக் கட்டிக்கொண்டு தேசம் போச்சு..தேசம்போச்சு..நீங்கதான் அதக்காப்பாத்தணும்”னு டாக்டரு, கலைஞரு சொன்ன பொய்யும் மறந்துட்டோம்,

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

மருமகனின் கு”மாறன்கள்” செய்த ஊழலும் மறந்தாச்சு, 2G ஊழல மறந்தாச்சு, மதுரையில தினகரன் அலுவலகத்துல தீ வைச்சு கொளுத்தி,அங்கு் மூணு இளைஞர்கள் சாவுக்கு காரணமான அஞ்சா நெஞ்சக் கொடுமைகளையும் மறந்தாச்சு, தா. கிருஷ்ணன் கொலைய மறந்தாச்சு, “ஈ.வி,கே. சம்பத்த” ஆள வைச்சு அடிச்சத மறந்தாச்சு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கச் செய்து,அப்பொழுது நிகழ்ந்த மாணவர்களின் இறப்பை மறந்தாச்சு, மத்திய அரசில் பங்கு கேட்க டெல்லிக்குப் பறந்து போய் முரண்டு பிடித்து “கப்பல் துறை” மந்திரிப்பதவியை வாங்கி்ி அடித்த கொள்ளையையும் மறந்தாச்சு, கள்ளுக்கடையைத் திறந்து விட்டு தனது கட்சி சகாக்களையே மதுபான தொழிற்சாலைகளைத் திறக்கவைத்து தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கி, இன்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “மதுவிலக்கு” கொண்டுவருவோம் என்று சொன்ன நாடகத்தையும் மறந்தாச்சு, சொத்து வழக்க மறந்தாச்சு, திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி ஊழல மறந்தாச்சு, தமிழ் நாட்டில் உள்ள நிலங்களை, ஏரிகளை கபளீகரம் செய்த “யோக்கியர்களை” மறந்தாச்சு, ஆற்று மணற் கொள்ளையரின் அட்டகாசங்களை மறந்தாச்சு, இந்த வருடம் பெய்த பேய் மழைச் சேதங்களை மறந்தாச்சு, இப்ப புதுசா “ஜல்லிக்கட்டு” ஓடிக்கிட்டிருக்கு..அதுவும் இன்னிக்கு காணும் பொங்கல் முடிஞ்சிட்டா மறந்துர வேண்டியதுதான்….”
 
“ஆசிரியரே…மறந்தாச்சு…மறந்தாச்சுன்னு…என்தன செய்திய நினைச்சுட்டிருக்கீறு…நீறு கல்லுணி மங்கான்வே”
 
” வே…நினைக்க வேண்டிய “காந்திய” மறந்துட்டோம்…மறக்கவேண்டிய “காந்திகள” நெனச்சுட்டு திரியறோம்” …சத்தியமூர்த்திய மறந்துட்டோம்,லால்பகதூர் சாஸ்திரிய மறந்துட்டோம், ராஜாஜிய மறந்துட்டோம், காமராஜர மறந்துட்டோம், ஏன்…அண்ணாத்துரையவே மறந்துட்டோம்…இன்னும் இப்படி நெறயக் கெடக்கு மனசுக்குள்ள….”
 
“வே…நீறு சொல்லுதப் பாத்தா…நேர்மையா, எளிமையா இருந்து, ஊருக்கு நல்லது பண்ணின தலைவர்கள மறந்துட்டோம்..ஊழல் பண்ணின பேர்வழிகளத்தான் நெனைச்சிட்டிருக்கோங்கீரா….”
 
“சரி..போவோம் வாரும்…இன்னிக்கி இது போதும்..ஆத்து மணல இவக கொள்ளை கொண்டு போறதுக்கு முன்னாடி “ஆத்துல” ஒரு முங்கு போட்டு வீட்டுக்குப் போவோம்…நேரமாயிட்டா பொஞ்சாதி பொரட்டி எடுத்துருவால்ல….”
 
” வெவரமான ஆளுவே நீறு”

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

– மீ.விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories