“ஆத்துப் பாலக் கச்சேரி”

“எலேய்…அது யாரு..கோமதிநாயகம் புள்ளயா…எங்கலே ஆத்துக்கு குளிக்கவா….இங்க நாங்க நல்லுபேரு ஒக்காந்திருக்கோமுல்லா…காண்ணுல தெரியலையா…அதுக்குள்ளாலயால மறந்திட்டாயா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையா…வேலைக்குப் போணும்…அதான் ஓடுதேன்…ஒங்கள மறப்பேனா”
 
“அட…அப்படி போடுறா…இந்த நாட்டுல நாமெல்லாம் எல்லாத்தையும் மறந்திட்டிலா திரியுதோம்….”
 
“ஆசிரியரே….எங்கவே கயத்த நீட்டுதீறு”
 
“ஆமா…பூச்சி மருந்து ஊழல மறந்துட்டோம், கோதுமை பேர ஊழல மறந்துட்டோம், வீராணம் ஊழல மறந்துட்டோம், விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் ஊழல் விஞ்ஞானி என்று “சர்க்காரியா கமிஷன” காட்டி என்ன உள்ள தள்ளிடாதீங்கனு அம்மா கால்ல..அதான் இந்திராகாந்தி கால்ல விழுந்தத மறந்துட்டோம், அந்தம்மா செய்த அவசரச்சட்டக் கொடுமைகள மறந்துட்டோம், அந்த அம்மாவ மதுரைல தி.மு.க. தாக்கியத மறந்துட்டோம், அப்ப அந்த அம்மா புடவைல இருந்த “ரத்தத்துக்கு” நம்ம கலியுக டாக்டர் கலைஞரு சொன்ன விளக்கத்த மறந்துட்டோம்,காமராஜர மறந்துட்டோம், காமராஜர் இறந்த பொழுது, “காமராஜர் என்னைக் கட்டிக்கொண்டு தேசம் போச்சு..தேசம்போச்சு..நீங்கதான் அதக்காப்பாத்தணும்”னு டாக்டரு, கலைஞரு சொன்ன பொய்யும் மறந்துட்டோம்,

மருமகனின் கு”மாறன்கள்” செய்த ஊழலும் மறந்தாச்சு, 2G ஊழல மறந்தாச்சு, மதுரையில தினகரன் அலுவலகத்துல தீ வைச்சு கொளுத்தி,அங்கு் மூணு இளைஞர்கள் சாவுக்கு காரணமான அஞ்சா நெஞ்சக் கொடுமைகளையும் மறந்தாச்சு, தா. கிருஷ்ணன் கொலைய மறந்தாச்சு, “ஈ.வி,கே. சம்பத்த” ஆள வைச்சு அடிச்சத மறந்தாச்சு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கச் செய்து,அப்பொழுது நிகழ்ந்த மாணவர்களின் இறப்பை மறந்தாச்சு, மத்திய அரசில் பங்கு கேட்க டெல்லிக்குப் பறந்து போய் முரண்டு பிடித்து “கப்பல் துறை” மந்திரிப்பதவியை வாங்கி்ி அடித்த கொள்ளையையும் மறந்தாச்சு, கள்ளுக்கடையைத் திறந்து விட்டு தனது கட்சி சகாக்களையே மதுபான தொழிற்சாலைகளைத் திறக்கவைத்து தமிழக மக்களைக் குடிகாரர்களாக்கி, இன்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் “மதுவிலக்கு” கொண்டுவருவோம் என்று சொன்ன நாடகத்தையும் மறந்தாச்சு, சொத்து வழக்க மறந்தாச்சு, திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றி ஊழல மறந்தாச்சு, தமிழ் நாட்டில் உள்ள நிலங்களை, ஏரிகளை கபளீகரம் செய்த “யோக்கியர்களை” மறந்தாச்சு, ஆற்று மணற் கொள்ளையரின் அட்டகாசங்களை மறந்தாச்சு, இந்த வருடம் பெய்த பேய் மழைச் சேதங்களை மறந்தாச்சு, இப்ப புதுசா “ஜல்லிக்கட்டு” ஓடிக்கிட்டிருக்கு..அதுவும் இன்னிக்கு காணும் பொங்கல் முடிஞ்சிட்டா மறந்துர வேண்டியதுதான்….”
 
“ஆசிரியரே…மறந்தாச்சு…மறந்தாச்சுன்னு…என்தன செய்திய நினைச்சுட்டிருக்கீறு…நீறு கல்லுணி மங்கான்வே”
 
” வே…நினைக்க வேண்டிய “காந்திய” மறந்துட்டோம்…மறக்கவேண்டிய “காந்திகள” நெனச்சுட்டு திரியறோம்” …சத்தியமூர்த்திய மறந்துட்டோம்,லால்பகதூர் சாஸ்திரிய மறந்துட்டோம், ராஜாஜிய மறந்துட்டோம், காமராஜர மறந்துட்டோம், ஏன்…அண்ணாத்துரையவே மறந்துட்டோம்…இன்னும் இப்படி நெறயக் கெடக்கு மனசுக்குள்ள….”
 
“வே…நீறு சொல்லுதப் பாத்தா…நேர்மையா, எளிமையா இருந்து, ஊருக்கு நல்லது பண்ணின தலைவர்கள மறந்துட்டோம்..ஊழல் பண்ணின பேர்வழிகளத்தான் நெனைச்சிட்டிருக்கோங்கீரா….”
 
“சரி..போவோம் வாரும்…இன்னிக்கி இது போதும்..ஆத்து மணல இவக கொள்ளை கொண்டு போறதுக்கு முன்னாடி “ஆத்துல” ஒரு முங்கு போட்டு வீட்டுக்குப் போவோம்…நேரமாயிட்டா பொஞ்சாதி பொரட்டி எடுத்துருவால்ல….”
 
” வெவரமான ஆளுவே நீறு”

– மீ.விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories