நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போக்குவரத்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இந்திய சுதந்திர தினத்தைப் போற்றிக் கொண்டாடும் வகையிலும், செங்கோட்டை போலீஸார் வித்தியாச ஏற்பாடுகளைச் செய்தனர்.
இன்று காலை நகரில் பல இடங்களுக்கும் சென்று, செங்கோட்டை போலீஸார் இனிப்புகளை வழங்கி, சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.
குறிப்பாக, செங்கோட்டை நகரில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லியும், சாதாரணமாக வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறியும் இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.