சுதந்திரப் போராட்டத்தில் கருவூரின் பங்கு மகத்தானது..!

melai pazhaniappan karur - 2026

கருவூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சியுடன் பரிசுகள் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 73 -ஆவது சுதந்திர தின விழா தாளாளர் K.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்க ஆலோசகர் செல்வதுரை வாழ்த்துரை ஆற்றினார்.

இதை தொடர்ந்து., கருவூர் திருக்குறள் பேரவையின் செயலரும், தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மேலை பழநியப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்ததோடு, சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், விருதுகளை வழங்கினார்.

பின்னர் சிறப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில்… அடிமை இந்தியாவில் சுதந்திர போராட்டம் ஏன் ஏற்பட்டது என்றால் நமது நாட்டில் நமக்கு பேச்சுரிமை எழுத்துரிமை தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை மறுக்கப்பட்டது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

melai pazhaniappan karur1 - 2026எடுத்ததற்கு எல்லாம் அடக்குமுறையும் சிறைத் தண்டனையும், நாடு கடத்தலும் நடைபெற்றது. இதை எதிர்த்து தேசப்பிதா காந்தி நேரு, பாரதி, குமரன், காமராஜ், தில்லயாடி வள்ளியம்மை ஜான்சிராணி, தீரன் சின்னமலை, வ.உ.சி போன்ற பலரால் சத்யாகிரக வழியிலும் சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களால் தீவீரவாத வழியிலும்!

பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்து உயிர் துறந்து பெற்றது தான் இந்த சுதந்திரம்.

கருவூர் மாவட்டத்தில் நைனா சாகிப் அவர் மனைவி, பவித்திரம் காளிமுத்து, வெங்கிடாசலம், தேவசகாயம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானவர்கள் வெள்ளையனே வெளியேறு! போராட்டத்திலும், வேலாயுதம்பாளையம் ஆயுத ரயில் கவிழ்ப்பிலும் பங்கேற்று அரியலூர் _ குளித்தலை _ முசிறி – சேலம் சிறைகளில் பல மாதம் அடைக்கப்பட்டு போராடி உள்ளார்கள்

இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கும் தமிழகத்தில் கருவூர் மாவட்டத்தின் பங்கும் குறிப்பாக மைசூர் அரண்மனை கிஸ்தி வசூல் பைகளை பறித்து ஆனைமலைக்கும் சென்னிமலைக்கும் இடையே தீரன் சின்னமலை இது எங்கள் இந்திய மக்களுக்கு உரிமையான தொகை என கர்ஜித்து பறித்து மூன்று போர்களில் வெள்ளையர்களை தோற்கடித்தவன்..

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

தீரன் சின்னமலை போன்றவர்களின் பங்கும் மகத்தானது! என்று பேசினார்.

நாடு செழிக்க நல்ல மழை பொழிய, சுற்றுச்சூழல் மேம்பட ஒவ்வொரு மாணவ மாணவியும் இன்றைய நாளில் உங்கள் வீட்டில், தெருவில் ஒரு மரக்கன்றை நட்டு பராமரியுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories