
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 16 ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன்
ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முத்தையா, கோதண்டபாணி, ரங்கசாமி, தமிழ்ச்செல்வன், அரூர் முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், வெற்றிவேல், ஜாக்கையன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் பங்கேற்றுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தோப்புர் வெங்கடாசலம் பங்கேற்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என கூறப்பட்டு வந்தது. இநிலையில் தற்போது 16 எம்.எல்.ஏக்கள் அவருடைய வீட்டில் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


