ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் புகார்கள் வந்ததை அடுத்து, உதவி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உதவி காவல் ஆணையராக மாதவனை நியமிக்கப்பட்டார். இதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் புதன்கிழமை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை உதவி காவல் ஆணையராக இருந்த மாதவனை ஸ்ரீரங்கம் உதவி காவல் ஆணையராக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது கடந்த சில நாட்களாக ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அ.தி.மு.க தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து உதவி காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: புகார்கள் வந்ததால் உதவி ஆணையர் மாற்றம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari