தென்காசி:
தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மரத்தின் உச்சியில் திடீரென தீ பற்றியது. இதைக்கண்டு அருகில் இருந்தோர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் படம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மரத்தின் மேல் எப்படி தீப்பற்றியது என்பது புதிராகவே உள்ளது தலத்தின் உள்ளே தீ பற்றியது குறித்து அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்