செங்கோட்டை கேரளத்தில் இன்று பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்துக்குச் செல்லும் பஸ்கள் தமிழக எல்லையான செங்கோட்டை அருகே கோட்டைவாசல் பகுதியில் நிறுத்தப் பட்டது. கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதில் நிதி மந்திரி மானி ஊழல் செய்திருப்பதாக பா.ஜனதா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் நிதி மந்திரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் இன்று பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கேரளாவில் இன்று பா.ஜனதா சார்பில் பந்த் நடைபெற்றது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கார், வேன், பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவில் பந்த் நடைபெறுவதையொட்டி செங்கோட்டையில் இருந்து கொல்லம், கொட்டாரக்கரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று நிறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற லாரிகள் புளியரை வாகன சோதனைச் சாவடி அருகே நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து கேரளா சென்ற அரசு பஸ்கள் தமிழக எல்லையான செங்கோட்டை அருகேயுள்ள கோட்டைவாசல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. பஸ்கள் ஓடாததால் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லவில்லை.
Less than 1 min.Read
கேரளத்தில் பந்த்: கேரளா செல்லும் பஸ்கள் செங்கோட்டை அருகே நிறுத்தம்
Hot this week
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
சற்றுமுன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...
சற்றுமுன்
திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Topics
நெல்லை
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
சற்றுமுன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...
சற்றுமுன்
திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம்
நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
கட்டுரைகள்
ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
Entertainment News
Previous article
Next article


