கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி (25) என்பவர் 3 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது. சம்பவத்தின்போது, பாண்டி செல்வி போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது, 2 பேர் தப்பி ஓட, ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரைப் பிடித்து கொடைக்கானல் போலீசில் அக்கம் பக்கத்தினர் ஒப்படைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை நரிமேட்டை சேர்ந்த கேசவன் மகன் சம்பத்குமார் (32) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்கள் அவரது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலை சேர்ந்த ஜெகதீசபாண்டி, சென்னையை சேர்ந்த சக்திவேல் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பத்குமார் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரிடம் சம்பத்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், ”நான் பியர்சோழா ரோட்டில் தனியார் காட்டேஜில் வேலை பார்த்து வந்தேன். மேலும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறை எடுத்து கொடுக்கும் வேலையும் பார்த்து வருகிறேன். என்னை தேடி எனது நண்பர்கள் அடிக்கடி கொடைக்கானல் வருவது வழக்கம். அதுபோல் கடந்த 6 ஆம் தேதி ஜெகதீசபாண்டியும், சக்திவேலும் வந்தனர். நாங்கள் 3 பேரும் காட்டேஜில் மது குடித்து கொண்டிருந்தோம். எங்கள் காட்டேஜ் அருகில் உள்ள பிரதீப் அலெக்ஸ்சாண்டரின் நாய் குரைத்து கொண்டே வந்தது. நாங்கள் அதற்கு மதுவும், பிரியாணியும் கொடுத்தோம். இதைப் பார்த்த பாண்டிச் செல்வி எங்களை திட்டிவிட்டு நாயை அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட பாண்டி செல்வி எங்களை திட்டி கொண்டே இருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் மூன்று பேரும் அவரது வீட்டிற்குள் சென்றோம். ஆனால், எங்களை வீட்டிற்குள் விடாமல் அவர் கதவை அடைத்து கொண்டார். ஆனாலும் கதவை தள்ளிக் கொண்டு 3 பேரும் உள்ளே சென்று பாண்டி செல்வியை சரமாரியாக தாக்கினோம். அப்படியும் எங்களுக்கு ஆத்திரம் தீராததால், அவரது ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தோம். அப்போது பாண்டி செல்வி சத்தம் போட்டார். உடனே விஷயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அவரை கத்தியால் குத்தினோம். இதில், ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி அதே இடத்தில் இறந்து போனார். உடனே என்னுடன் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நானும் தப்ப வெளியே வந்தபோது அக்கம்பக்கத்தினர், போதையில் இருந்த என்னை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறி உள்ளார்.
4 min.Read
நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இந்தியா
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
RSS condemns Ram temple donation theft, urging strict action and patience from the community during this challenging time.
நெல்லை
திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .
அரசியல்
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
ஆன்மிகச் செய்திகள்
திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விளையாட்டு
FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
சென்னை
ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

