கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை கொடிமங்கலத்தை சேர்ந்த பாண்டி செல்வி (25) என்பவர் 3 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாண்டி செல்வி வீட்டில் தனியாக இருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது. சம்பவத்தின்போது, பாண்டி செல்வி போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது, 2 பேர் தப்பி ஓட, ஒருவர் மட்டும் போதை தலைக்கேறிய நிலையில் கிடந்துள்ளார். அவரைப் பிடித்து கொடைக்கானல் போலீசில் அக்கம் பக்கத்தினர் ஒப்படைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை நரிமேட்டை சேர்ந்த கேசவன் மகன் சம்பத்குமார் (32) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்கள் அவரது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் லாடனேந்தலை சேர்ந்த ஜெகதீசபாண்டி, சென்னையை சேர்ந்த சக்திவேல் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து சம்பத்குமார் கொடுத்த தகவலின்படி தப்பி ஓடிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், போலீசாரிடம் சம்பத்குமார் கொடுத்த வாக்குமூலத்தில், ”நான் பியர்சோழா ரோட்டில் தனியார் காட்டேஜில் வேலை பார்த்து வந்தேன். மேலும், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அறை எடுத்து கொடுக்கும் வேலையும் பார்த்து வருகிறேன். என்னை தேடி எனது நண்பர்கள் அடிக்கடி கொடைக்கானல் வருவது வழக்கம். அதுபோல் கடந்த 6 ஆம் தேதி ஜெகதீசபாண்டியும், சக்திவேலும் வந்தனர். நாங்கள் 3 பேரும் காட்டேஜில் மது குடித்து கொண்டிருந்தோம். எங்கள் காட்டேஜ் அருகில் உள்ள பிரதீப் அலெக்ஸ்சாண்டரின் நாய் குரைத்து கொண்டே வந்தது. நாங்கள் அதற்கு மதுவும், பிரியாணியும் கொடுத்தோம். இதைப் பார்த்த பாண்டிச் செல்வி எங்களை திட்டிவிட்டு நாயை அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற பிறகும் கூட பாண்டி செல்வி எங்களை திட்டி கொண்டே இருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் மூன்று பேரும் அவரது வீட்டிற்குள் சென்றோம். ஆனால், எங்களை வீட்டிற்குள் விடாமல் அவர் கதவை அடைத்து கொண்டார். ஆனாலும் கதவை தள்ளிக் கொண்டு 3 பேரும் உள்ளே சென்று பாண்டி செல்வியை சரமாரியாக தாக்கினோம். அப்படியும் எங்களுக்கு ஆத்திரம் தீராததால், அவரது ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்தோம். அப்போது பாண்டி செல்வி சத்தம் போட்டார். உடனே விஷயம் வெளியே தெரிய கூடாது என்பதற்காக அவரை கத்தியால் குத்தினோம். இதில், ரத்த வெள்ளத்தில் பாண்டி செல்வி அதே இடத்தில் இறந்து போனார். உடனே என்னுடன் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நானும் தப்ப வெளியே வந்தபோது அக்கம்பக்கத்தினர், போதையில் இருந்த என்னை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறி உள்ளார்.
Less than 1 min.Read
நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகக் கட்டுரைகள்
அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகக் கட்டுரைகள்
அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
இந்தியா
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

