காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

sofia tuticorin - 2026

தூத்துக்குடி: விமானத்தினுள் பாஜக., தமிழக தலைவர் தமிழிசையை அவமானப் படுத்தும் வகையில் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெண் சோபியா, பின்னர் தமிழிசையின் புகாரின் பேரில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அவருக்கு ஜாமீன் வழங்கும்போது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கூறிய நிலையில், வழக்கு விசாரணையின் போது, காலாவதியான பழைய பாஸ்போர்ட்டை சோபியா வழங்கியிருக்கிறார். இதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வரும் 8ஆம் தேதி பாஸ்போர்ட்டுடன் தூத்துக்குடி – புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராகும்படி மாணவி சோபியாவுக்க்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

ஏற்கெனவே, சோபியாவின் தந்தை தாம் ஒரு தேவேந்திர குல வேளாளர் என்று சாதியின் பின்னணியை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். சாதி குறித்த பிரச்னை ஏதும் இல்லாத நிலையில், இவர் ஏன் சாதியைக் குறித்தார் என்று கேள்விகள் எழுப்பப் பட்டன.

இது குறித்து ஒரு டிவியில் அளித்த பேட்டியில், தன் மகள் சோபியா ஓர் அறிவியல் மாணவி என்றும், அவருக்கு சட்டம் குறித்து எந்தப் பயிற்சியும் இல்லை என்றும், அவர் ஒரு வெகுளிப் பெண் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நீதிமன்றம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கச் சொன்ன நிலையில், காலாவதியானதை தேர்வு செய்து விசாரணைக்கு வழங்கிய வகையில் அவர் ஒரு வெகுளிப் பெண் தான் என்பது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories