கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

sengottai vinayagar visarjanam3 - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என பள்ளிவாசலை அடுத்த பெரிய தெருவில் வசிக்கும் ஒரு தரப்பினர் கூறியதால் நேற்று இரவு வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து விநாயகர் சிலை மீதும், விநாயகர் அழைப்பு ஊர்வலத்தினர் மீதும் கற்கள் வீசப் பட்டன.

இந்த மோதலில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க செங்கோட்டை பகுதியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டது.

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் நேற்று பிரச்னை ஏற்பட்ட அதே இடத்தில், மர்ம நபர்கள் சிலர் வீடுகளுக்குள் ஒளிந்திருந்து, திடீரென ஊர்வலத்தின் மீது கல் வீசி தாக்கினர். இதனால் மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

இதைத் தொடர்ந்து கல் வீசியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்தச் சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், சரக டிஐஜி கபில்குமார், மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆகியோர் விரைந்தனர். ஊர்வலத்தை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, காவல் நிலையத்தில் வைத்து ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப் பட்டன. அதன்படி, கோஷம் எதுவும் போடக் கூடாது; தள்ளாட்டம் ஆடக் கூடாது; தேவையற்ற ஆர்ப்பாட்டம் கூடாது; போக்குவரத்துக்கு இடையூறு கூடாது; இசைக்கருவிகள் டிரம்ஸ் இசைக்க தடையில்லை!தீர்மானிக்கப் பட்ட பதையில் போகத் தடை இல்லை. ஆனால் பிரச்னை ஏதாவது வந்தால் நாங்கள் சொல்லும் பாதையில் செல்ல வேண்டும்.

– இப்படி சில நிபந்தனைகள் காவல்துறையினரால் முன்வைக்கப் பட்டன. இவை எல்லாவற்றையும் ஏற்று ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர் வீர விநாயகர் விழா கமிட்டியினர். 144 தடை உத்தரவு போடப் பட்டிருந்ததால், எங்கும் எந்த விதமான கோஷங்களும் எழுப்பப் படவில்லை. விநாயகருக்கு ஜே கோஷம் கூட எழுப்பப் படவில்லை. வாத்தியங்களின் இசைச் சத்தம் மட்டுமே கேட்டது.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

வழக்கத்தை விட அதிக அளவில் ஊர் மக்கள் விநாயகர் ஊர்வலத்தைக் காண திரண்டனர்.  பெண்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு, பார்த்து ரசித்தனர். வழக்கத்துக்கு மாறாக காவல்துறை உயரதிகாரிகள், போலீஸார் விநாயகருக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் சென்றனர்.

sengottai vinayagar visarjanam2 - 2026

மாலை நேரம் 6 மணி நெருங்க நெருங்க, ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்தவர்களை நேரம் ஆகிறது சீக்கிரம் நகர்த்துங்கள் என்று காவல்துறை அதிகாரிகள் விரைவு படுத்தினர். அதையும் ஏற்று அதிக ஆட்டம்பாட்டம் இன்றி இளைஞர்கள் கட்டுப்பட்டனர்.

sengottai vinayagar visarjanam5 - 2026

பின்னர் மாலை 7 மணி அளவில் செங்கோட்டை குண்டாற்றுப் பகுதியில் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் எடுக்கப் பட்டு, அவை கரைக்கப் பட்டன. ஊர்வலம் பின்னர் அசம்பாவிதம் ஏதுமின்றி நடைபெற போலீஸார் அதிக அளவில் கவனம் எடுத்துக் கொண்டனர். பாதுகாப்புப் பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories