கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

sengottai vinayagar visarjanam3 - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என பள்ளிவாசலை அடுத்த பெரிய தெருவில் வசிக்கும் ஒரு தரப்பினர் கூறியதால் நேற்று இரவு வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து விநாயகர் சிலை மீதும், விநாயகர் அழைப்பு ஊர்வலத்தினர் மீதும் கற்கள் வீசப் பட்டன.

இந்த மோதலில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க செங்கோட்டை பகுதியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டது.

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் நேற்று பிரச்னை ஏற்பட்ட அதே இடத்தில், மர்ம நபர்கள் சிலர் வீடுகளுக்குள் ஒளிந்திருந்து, திடீரென ஊர்வலத்தின் மீது கல் வீசி தாக்கினர். இதனால் மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இதைத் தொடர்ந்து கல் வீசியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்தச் சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், சரக டிஐஜி கபில்குமார், மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆகியோர் விரைந்தனர். ஊர்வலத்தை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, காவல் நிலையத்தில் வைத்து ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப் பட்டன. அதன்படி, கோஷம் எதுவும் போடக் கூடாது; தள்ளாட்டம் ஆடக் கூடாது; தேவையற்ற ஆர்ப்பாட்டம் கூடாது; போக்குவரத்துக்கு இடையூறு கூடாது; இசைக்கருவிகள் டிரம்ஸ் இசைக்க தடையில்லை!தீர்மானிக்கப் பட்ட பதையில் போகத் தடை இல்லை. ஆனால் பிரச்னை ஏதாவது வந்தால் நாங்கள் சொல்லும் பாதையில் செல்ல வேண்டும்.

– இப்படி சில நிபந்தனைகள் காவல்துறையினரால் முன்வைக்கப் பட்டன. இவை எல்லாவற்றையும் ஏற்று ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர் வீர விநாயகர் விழா கமிட்டியினர். 144 தடை உத்தரவு போடப் பட்டிருந்ததால், எங்கும் எந்த விதமான கோஷங்களும் எழுப்பப் படவில்லை. விநாயகருக்கு ஜே கோஷம் கூட எழுப்பப் படவில்லை. வாத்தியங்களின் இசைச் சத்தம் மட்டுமே கேட்டது.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

வழக்கத்தை விட அதிக அளவில் ஊர் மக்கள் விநாயகர் ஊர்வலத்தைக் காண திரண்டனர்.  பெண்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு, பார்த்து ரசித்தனர். வழக்கத்துக்கு மாறாக காவல்துறை உயரதிகாரிகள், போலீஸார் விநாயகருக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் சென்றனர்.

sengottai vinayagar visarjanam2 - 2026

மாலை நேரம் 6 மணி நெருங்க நெருங்க, ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்தவர்களை நேரம் ஆகிறது சீக்கிரம் நகர்த்துங்கள் என்று காவல்துறை அதிகாரிகள் விரைவு படுத்தினர். அதையும் ஏற்று அதிக ஆட்டம்பாட்டம் இன்றி இளைஞர்கள் கட்டுப்பட்டனர்.

sengottai vinayagar visarjanam5 - 2026

பின்னர் மாலை 7 மணி அளவில் செங்கோட்டை குண்டாற்றுப் பகுதியில் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் எடுக்கப் பட்டு, அவை கரைக்கப் பட்டன. ஊர்வலம் பின்னர் அசம்பாவிதம் ஏதுமின்றி நடைபெற போலீஸார் அதிக அளவில் கவனம் எடுத்துக் கொண்டனர். பாதுகாப்புப் பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories