திருச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதிய காரியாலயத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகளும், சைவ மடங்களைச் சேர்ந்த ஆதினங்களும் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் ஜி பாகவத், திருப்பூரில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். பாரம்பரிய வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்.