70 ஆயிரம் லஞ்சம்!கோவில் உதவி ஆணையர், தலைமை எழுத்தர் சிக்கினர்!

selam hrnce - 2026

சேலம்: நுாதன முறையில் பொங்கல் பண்டிகை இனாமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்றதாக சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர், தலைமை எழுத்தர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினர்.

சேலம், சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், காசி விஸ்வநாதர் கோவில் உட்பட ஆறு கோவில்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவை அனைத்தையும் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணைய தமிழரசு (55) தலைமை எழுத்தர் வன்னியர் திலகம்(48) ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இவற்றில் ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் வெள்ளி, தங்கத்தாலான கவசங்கள், ஆபரணங்கள் அனைத்தும் அந்த கோவிலில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வந்தது. அண்மையில், அந்த அறையில் இருந்த பொருட்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

தற்போது அந்த அறையை லஞ்ச வசூல் இடமாக மாற்றி, அதில் ஒரு டேபிள் வைத்துள்ளனர். அந்த டேபிளுக்கும், அறைக்கும் இரண்டு சாவிகள் தயார் செய்து, அதில் ஒன்றை அதிகாரிகள் வைத்திருப்பதும், மற்றொன்றை லஞ்சம் இனாம் பேசி தர ஒப்புக் கொள்பவரிடம் வழங்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாவியை பெறுவோர், தனித்தனியாக பெயர் எழுதி கவரில் பணத்தை வைத்து அறை டேபிளில் வைத்து பூட்டி விட வேண்டும். பின்னர் அந்தப் பணத்தை உதவி ஆணையர், தலைமை எழுத்தர் இருவரில் ஒருவர் சென்று எடுத்துக் கொள்வர். இந்த நுாதன வசூல் குறித்து, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சந்திரமவுலிக்கு புகார்கள் சென்றன.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

பொங்கல் பண்டிகையான இன்று (ஜன.,15) காலை இரண்டு கான்ட்ராக்டர்கள் பணத்தை கொடுக்க சம்மதித்து இருந்தனர். சுவாமி தரிசனம் செய்ய வருவது போல் வந்து, அறையில் சென்று பணத்தை வைத்தனர். இதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்காணித்தபடி இருந்த நிலையில், உதவி ஆணையர் தமிழரசு அறைக்குச் சென்று பணத்தை எடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் இருந்து பெறப்பட்ட இரண்டு கவர்களில், ஒன்றில் தமிழரசு பெயரில் 60 ஆயிரம் ரூபாய், மற்றொன்றில் வன்னியர்திலகம் பெயரில் 10 ஆயிரம் ரூபாய் என எழுதப் பட்டிருந்தது. கவர்களை கைப்பற்றிய போலீசார், தொடர்ந்து தமிழரசிடம் விசாரணை நடத்தினர். அதில், பொங்கல் இனமாகக் கிடைத்ததாக அவர் கூறினார்.

லஞ்ச புகாரில் சிக்கும் இரண்டாவது உதவி ஆணையர்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 2008இல் உதவி ஆணையராக இருந்த விஜயகுமார், சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது பிடிபட்டார். தற்போது, தமிழரசு, பொங்கல் இனாம் வசூலித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வலையில் சிக்கியுள்ளார்.
..

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories