கருணாநிதியைத் தவிர இந்த ஜகஜால புரட்டை வேறு எவனும் செய்ய முடியாது! இதைச் சொன்னவர், வைகோ.
கருணாநிதியுடன் கூடவே இருந்து அனைத்து அவரின் அனைத்து தகிடுதத்தங்களையும் ஜகஜாலப் புரட்டுகளையும் கவனித்தவர், கற்றவர்.
தனது மகன் மு.க.ஸ்டாலின் திமுக,வின் தலைவராக வரவேண்டும் என்பதற்காக, கட்சியின் செல்வாக்கு பெற்றவராக வலம் வந்தவரை கொலைப் பழி சுமத்தி கட்சியை விட்டு வெளியேற்றியதால் கண்ணீர் விட்டு அழுது ஏமாற்றம் அடைந்து, பின்னர் தனிக்கட்சி தொடங்கி மதிமுக.,வின் பொதுச் செயலராகி, கருணாநிதியை வேண்டும் மட்டும் திட்டித் தீர்த்து, உண்மைகளை அவ்வப்போது போட்டுடைத்து, பின்னர் கருணாநிதியிடமே தனது கட்சியைக் காப்பாற்றவும், ஒரு எம்.பி.,சீட்டுக்காகவும் காலடி பணிந்து, கமுக்கமான அதே வைகோ.,தான் இதனை அன்று கூறினார்!
நெஞ்சுக்கு நீதியில் பல பொய்யான செய்திகளை எல்லாம் செதுக்கி முரசொலி 1948 இல் ஜனவரி 14 இல் தொடங்கபட்டதாக புழுகப்பட்டிருக்கிறது ????????
1942 ஆ அல்லது 1948 ஆ அல்லது 1956 ஆ எப்போது முரசொலி தொடங்கப்பட்டது.. 200 ஊபி தெளிவுபடுத்தவும் @Udhaystalin
#Dmkfails