இலங்கைத் தமிழர்களும்! இந்திய குடியுரிமை சட்டத் திருத்தமும்!

Published:

modi srilanka - 2026
file picture

இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் இலங்கைத் தமிழர்கள் என்னவானது? அவர்களும் ஹிந்துக்கள் தானே என்று புதிய தியரியைக் கண்டுபிடித்தது போல் சொன்னார்கள் சிலர்..

இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். அவர்கள் வட மாகாணத்திலும், முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்திலும் இருக்கிறார்கள்.

ஒரு வேளை ஹிந்துக்கள் தமிழகத்தில் குடியுரிமை கொடுக்கப்பட்டு தமிழகத்தில் தங்கி விட்டால்- அங்கே கிழக்கு மாகாண முஸ்லிம்கள் , வடக்கிலும் கொடி நாட்டி விடுவார்கள்.

எப்படி தமிழன்- மியான்மார், சிங்கப்பூர் போன்ற நாடுகளைக் கோட்டை விட்டானோ அது போல் ஒரு நாள் இலங்கையையும் கை விட நேரும். சிங்களவனுக்குப் பிரச்னை இல்லை.

muslims srilanka conference - 2026
file picture

இலங்கையில் ஹிந்து தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு முஸ்லிம் பெயர்கள் வந்து கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளால் பழி வாங்கப்பட்டவர்கள், தமிழ் முஸ்லிம்கள். இதை தமிழகத்தில் சொல்ல மாட்டார்கள். ஆனால் நடந்திருக்கிறது. அந்தக் கணக்கை இப்போது இலங்கை முஸ்லிம்கள் நேர் செய்யக் கூடும்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

ஆக- இலங்கைத் தமிழ் ஹிந்துக்கள் இலங்கையில் தங்கியிருப்பதே நல்லது!

இலங்கை இஸ்லாமியர்கள், தங்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கிறார்கள். முஸ்லிம் அடையாளத்துக்கே முக்கியத்துவம் தர விரும்புகிறார்கள்!

  • கருத்து: Shree Gharudaazhvaan @Gharudan_2015

Related articles

Recent articles

spot_img