பின்வாங்கும் பிரியங்கா..! வாராணசியில் போட்டியில்லை?! மோடிஃபோபியா!

Published:

priyanka gandhi - 2026

வாரணாசியில் போட்டியிடாமல் பிரியங்கா பின்வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மோடிஃபோபியா – என்ற மோடி மீதான அச்சம் அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று கூறப் பட்டது. ஆனால், அவர் போட்டியிடுவதிலிருந்து, அச்சத்தின் காரணமாக பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச காங்கிரசின் கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக, கடந்த ஜனவரி மாதம் பிரியங்கா ராபர்ட் வத்ரா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுலுடன் பல இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், வாராணசி தொகுதியில் மோடிக்கு எதிராக பிரியங்கா வத்ராவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிடுவதாக கூறப்பட்டது. ஆனால், மோடியின் செல்வாக்குக்கு முன்னால் தாம் எடுபடமாட்டோம் என்று பயப்படும் பிரியங்கா வத்ரா, தாம் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img