December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

‘ஓசிச்சோறு’க்கு வக்காலத்து வாங்கும் ‘பழையசோறு’! இந்து விரோதப் பேச்சு எல்லை மீறிப் போச்சு!

stalin veeramani speech - 2025

கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு… என்று கூறியுள்ளார். மு.க. ஸ்டாலின்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் குறித்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர்தான் இது போன்ற பாலியல் குற்றவாளிகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கிருஷ்ணர் யாதவ குலத்தவர். தமிழகத்தில் உள்ள கோனார் பிரிவைச் சேர்ந்தவர் என்று அம்மக்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். ஆனால், இதே வீரமணியும் சாரங்கபாணி கோனார் என்ற இயற்பெயரைக் கொண்டவர்தான்! குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கி.வீரமணி, இப்போது, அதே யாதவ சமுதாயத்தினரால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்நிலையில், சாரங்கபாணி கோனார் என்ற கி.வீரமணியை கண்டிக்க மனமில்லாத மு.க.ஸ்டாலின், அவர் பேச்சுக்கு முட்டுக் கொடுத்து, வக்காலத்து வாங்கியுள்ளார்.

மேலும், ‘கோயில்கள் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது’ என்ற திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்ற திமுக.,வின் வரிகளை மேற்கோள் காட்டி, மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

stalin veeramani hug - 2025

அப்போது அவர், கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி பேசியது பெரியார் திடலில்.! தேர்தல் பிரசாரத்தில் அல்ல!. கி.வீரமணி பேச்சை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர் தவறாக சித்தரித்து பரப்பிவிட்டார்கள். கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி உள்நோக்கத்தோடு பேசவில்லை என்று கூறினார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.!

ஆனால், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் பலரும், வீரமணி என்ன பேசினார் என்பது உலகிற்கே தெரிந்தது! அவரை கண்டிக்க சொன்னால் ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் அவர் தவறாக பேசவில்லையாம்! அப்படி பேசியிருந்தால் தவறாம்!

stalin veeramani - 2025

அதாவது அவர் என்ன பேசினார் என தெரியாதாம் ஆனால் அவர் தவறாக பேசவில்லையாம்! உளறலுக்கும் ஒரு அளவில்லையா? இன்னமும் திக வீரமணியினை கண்டிக்க ஸ்டாலினுக்கு விருப்பமில்லை, ஆனால் பேச்சுமட்டும் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல‌! ஆனால் சொல்ல மறக்கும் விஷயம் “நாம் இந்துக்களுக்கு ஆதரவானவர்களும் அல்ல..”. என்பதுதான்!

எனவே இஸ்லாம், கிறிஸ்தவம் என்று மதங்களுக்கு ஆதரவானவர்களாகவும் அந்த மதங்களையே சேர்ந்தவர்களாகவும் இருக்கும் பகுத்தறிவுவாதி திராவிட இயக்கங்கள், என்னாளும் இந்துக்களுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்று வாய்திறந்து சொல்லப் போவதில்லை! எனவே திமுக., கூட்டணியில் உள்ளவர்களுக்கு வாக்களித்து நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடக் கூடாது என்ற பிரசாரத்தை பலமாக முன்னெடுத்துள்ளனர் சமூக ஊடகங்களில்!

இந்துக்களுக்கு எதிராக பேசுவதை, இந்துக்கள் மனம் புண்படும்படி பேசுவதை, திமுக., திக., தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவர்களில் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுக்கள் இந்து கடவுள்களை அவன், இவன் என்று சாடுவதும் பகுத்தறிவு என்ற பம்மாத்து காட்டி, அவதூறாகப் பேசுவதும் அதிகரித்தே வருகிறது.

முன்னர் கி.வீர்மணிக்கு ‘ஓசிச்சோறு’ என்று பட்டம் கொடுத்திருந்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி! இப்போது ஸ்டாலினுக்கும் பழையசோறு பட்டம் கொடுத்திருக்கிறார்கள் சமூக வலைத்தளத்தில்! அப்பன் சம்பாதிச்சி வெச்சதை அமுக்கிக் கொண்டு தின்று தீர்க்கும் பழையசோறு என்று குறிப்பிட்டு வருகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories