January 26, 2025, 8:43 AM
22.3 C
Chennai

ஆஹா..! எஸ்.பி.ஐ., வங்கியில் இனி குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டாயமில்லை!

எஸ்பிஐ வங்கி இன்று அதன் வாடிக்கையாளர்களுக்கு மனம் விரும்பும் அறிவிப்பு ஒன்றைச் செய்துள்ளது. ஆஹா! எஸ்பிஐ சேமிப்பு வங்கி கணக்குகளில் சராசரி மாத இருப்பு இப்போது தேவையில்லை என்பதுதான் அந்த இனிக்கும் செய்தி !

44.51 கோடி எஸ்பிஐ சேமிப்பு வங்கிக் கணக்குகளில் மாதாந்திர சராசரி தொகை- ஏஎம்பியை பராமரிப்பதற்கான கட்டணங்கள் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. தற்போது, ​​எஸ்பிஐ சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் முறையே மெட்ரோ, பாதி நகர மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 3,000, ரூ. 2.000 மற்றும் ரூ .1000 ஐ பராமரிக்க வேண்டும்.

தற்போது, சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை பராமரிப்பது என்பது, சேமிப்புக் கணக்குகளுக்கு தேவையில்லை என்று கூறியுள்ளது எஸ்.பி.ஐ.,

வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவில்லாத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது ஸ்டேட் பாங்க் நிர்வாகம். அதன்படி, அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் மாதாந்திர இருப்பு (AMB) என்பது ரத்து செய்யப் படுகிறது. இந்த முடிவு, நாட்டில் நிதிப் புழக்கத்தை ஊக்குவிப்பதற்கான தூண்டுகோலாக அமையும்.

முன்னதாக, ​​எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குக்கு முறையே மெட்ரோ, பாதி நகர மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்காவிட்டால், ரூ.15 வரை அபராதம் விதித்து வங்கி பிடித்தம்செய்து கொள்ளும். ஆனால், தற்போது ‘வாடிக்கையாளர்களே முதன்மையானவர்கள்’ என்ற அணுகுமுறையை மனதில் கொண்டு, வங்கி எஸ்.எம்.எஸ் கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. வங்கியின் இந்த நடவடிக்கை வங்கியின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க பயன் அளிக்கும். சேமிப்பு வங்கி கணக்கில் வட்டி விகிதத்தை 3 சதவீதமாக எஸ்பிஐ வகுத்துள்ளது.

ALSO READ:  ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

தள்ளுபடி குறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், “இந்த அறிவிப்பு மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புன்னகையையும் மகிழ்ச்சியையும் தரும். AMB ஐ தள்ளுபடி செய்வது என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியையும், உற்சாகமான வங்கி அனுபவத்தையும் வழங்குவதற்கான மற்றொரு முயற்சி. இந்த முயற்சி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ மீதான அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ” என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று