70 பேரிடம் லட்சக் கணக்கில் கறந்த… ‘கொரோனா பாபா’ என்ற இஸ்மாயில் பாபா!

corona-baba-arrested
corona-baba-arrested

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழமொழி ஆனால் இப்போதெல்லாம் கொரோனா காலம் உள்ளபோதே கறந்துவிடு என்று இந்த பழமொழியின் அர்த்தத்தை உலகத்துக்கு சொல்லி செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் சிலர். இஸ்லாமியர் ஒருவர் இது போல், மாந்திரீகம் என்ற பெயரில் பொது மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹைதராபாத்தில் போலி பாபா. அப்பாவி மக்களை ஏமாற்றி கொரானா வைரஸை முறியடிப்பதாக கூறி இஸ்மாயில் என்பவர் 70 பேரிடமிருந்து லட்சங்களை வசூல் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் குற்றவாளியை கைது செய்தனர்.

கொரோனா வைரஸை நீக்குவற்கு ஒருபுறம் உலக நாடுகளெல்லாம் பரிசோதனையில் மூழ்கி இருக்கையில் மறுபுறம் அக்கிரம வாதிகள் அதனை கேஷ் செய்து கொண்டுள்ளார்கள்.

இந்த வகையிலேயே திருட்டு பாபா அவதாரம் எடுத்த ஒருவர் கொரோனாவை முறியடித்து விடுவேன் என்று கூறி மருந்துகள் தேவையில்லை என்றும் மந்திரங்கள் போதும் என்றும் பலரிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். மியாபூரியில் உள்ள தாயத்துக்கள் கட்டும் இஸ்மாயில் பாபா என்பவர் கொரோனா வியாதியிலிருந்து காப்பாற்றுவேன் என்று கூறி தன்னிடம் வரும் மக்களை நம்ப வைத்துள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து அளிக்கிறேன் என்று கூறி தான் கொடுக்கும் தாயத்தினால் கொரோனா வைரஸ் அருகிலேயே வராது என்று நம்ப வைத்து ஒவ்வொருவரிடமும் 40 முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்ட பின் மருந்து எதுவும் கொடுக்காததால் ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை அன்று போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனால் களத்தில் இறங்கிய போலீசார் மூஸ்பெட் காலனியில் உள்ள பாபாவின் இடத்தை முற்றுகையிட்டனர்.

அவர் மந்திரங்கள் எலுமிச்சம்பழம் விபூதியால் பூஜைகள் செய்து அப்பாவிகளை எவ்வாறு மோசம் செய்கிறார் என்பதை நேரில் பார்த்தார்கள். அவரை கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

இந்த பாபா செய்யும் ஏமாற்று வேலைகள் குறித்து மார்ச் மாதத்திலேயே தமக்கு புகார்கள் வந்தன என்றும் அப்போதிலிருந்து பாபா தப்பித்துக் கொண்டு திரிகிறார் என்றும் போலீசார் கூறுகிறார்கள். சுமார் 70 பேருக்கு மேலாக இஸ்மாயில் பாபாவினால் ஏமாற்றப்பட்டு உள்ளார்கள் என்று அவருடைய விசாரணையில் தெரிந்ததாக கூறினார்கள்.

கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றும் இப்படிப்பட்ட போலி பாபாக்களை நம்ப வேண்டாம் என்றும் மாய மந்திரங்களால் கொரோனா வைரஸ் போகாது என்றும் போலீசார் அங்குள்ள மக்களிடம் எடுத்துரைத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories