இந்தி திரை உலகின் புறக்கணிப்பு! இசைபுயல் கூறிய குற்றச்சாட்டு!

c4e86fdd4d63a58ff18dbc42bf744632 - 2026

பாலிவுட்டில், என்ன பிரச்சினை என்றால் தென்னிந்தியர்கள், பாலிவுட் சினிமாவில் ஆளுமை செய்வதை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் பேட்டி அளித்துள்ளார். அதில் பாலிவுட்டில் தான் பணியாற்றுவதற்கு எதிராக, தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க ஒரு கூட்டமே செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள “தில் பேச்சாரோ” படத்தின் இயக்குனர் தன்னை சந்திக்க வந்த போது, எனக்கு அந்த வாய்ப்பை தர வேண்டாம் என்று சிலர் தடுத்துள்ளனர்.

இதேபோன்றுதான், தனக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பறிக்க ஒரு கூட்டமே காத்திருப்பதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார். 28 ஆண்டுகளான தனது இசைப் பயணத்தில், பாலிவுட்டில் குறைந்த அளவு படவாய்ப்புகளே கிடைத்தது. மேலும் தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்ற பின்னர், அவர் பணியாற்றிய இந்திப் படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே.

இதற்கு காரணம் இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டது, இந்த சூழ்நிலையில்தான் சுஷாந்த்தும் என்னைப் போன்றே புறக்கணிக்கப்பட்டு, மனம் தளர்ந்து தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று தனது பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் என்பதைவிட பாலிவுட்டில், என்ன பிரச்சினை என்றால் தென்னிந்தியர்கள், பாலிவுட் சினிமாவில் ஆளுமை செய்வதை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர். அவர்களால்தான் ரஹ்மானின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாமல், அவருடைய பட வாய்ப்புகளை கெடுப்பதாக, அவரது சகோதரி ஏ.ஆர்.ரெஹானா மனம் வருந்தி உள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமல்ல, யேசுதாஸ், வாணி ஜெயராம் போன்ற தென்னிந்திய கலைஞர்களையும் பாலிவுட் புறக்கணித்ததாக இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தீனா கூறியுள்ளார்.

ஒருவர் குறித்து புரளியை பரப்பி அவருக்கான வாய்ப்பை கெடுக்கும் மோசமான செயல்தான் இந்தி சினிமாவின் மிகப்பெரிய பிரச்னை என்றும், ஏ.ஆர்.ரஹ்மானும் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories