நள்ளிரவு 12.06க்கு நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம் நீங்கள் நிம்மதியாகத் தூங்குங்கள் என்று தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பாகிஸ்தான் ராணுவம்!
ஆனால், அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளன. இதனை பலரும் ரிட்வீட் செய்து வருகின்றனர்.
“Sleep tight because PAF is awake.” #PakistanZindabad pic.twitter.com/Wlriv5ZJRr
— Pakistan Defence (@DefencedotPak) February 25, 2019
காஷ்மீர் புல்வாமோ தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இறுதி மரியாதை செய்த மோடி சம்பிரதாய நடைமுறைகளுடன் வெறுமனே மலர் வளையம் வைத்துவிட்டு வரவில்லை. அப்போது வீரர்களின் உடல்களைச் சுமந்திருந்த பெட்டிகளை வலம் வந்து வணங்கியதுடன், பாகிஸ்தான் மிகப் பெரிய தவறிழைத்துவிட்டது. அவர்கள் வரலாற்றில் மறக்கவே முடியாத படி ஒரு பதிலடி கொடுக்கப் படும் என்று எச்சரித்தார்.
தொடர்ந்து, வெளியுறவுத் துறை மூலம் அனைத்து நாடுகளையும் தொடர்பு கொண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எடுத்துக் கூறி, இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகளை மாற்றினார். அப்போது, இஸ்ரேல் வெளிப்படையாக ஒரு வார்த்தை சொன்னது.. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டுக்கு உரிமை உள்ளது என்று கூறியது.
பின்னர் ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு எதிரான தீர்மானத்தின் போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்மானத்தை சீனாவும் ஆதரித்தது. இப்படி பதில் தாக்குதல் தொடுக்க பன்னிரண்டு நாள் கால அவகாசத்திற்குள் பின்னணி வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட இந்தியா, இன்று காலை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுவதாகவும், பாகிஸ்தான் விழிப்புடன் இருப்பதாகவும் கூறியது பாகிஸ்தான்!