தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்!
கேள்வி: ராஜராஜேஸ்வரியாக தரிசனம் அளிக்கும் லலிதாதேவிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? ப்ரீதியான புஷ்பங்கள் எவை?
பதில்: ராஜராஜேஸ்வரி சம்பூர்ணமான அம்பிகை ஆதலால் அனைத்துவித சாத்வீகமான நைவேத்தியங்களும் உகந்தவையே.
‘சர்வோதன ப்ரீத சித்தா’ – ‘அனைத்துவித உணவையும் விரும்பி ஏற்பவள்’ என்கிறோம்.
பூஜைக்குப் பயன்படுத்துபவற்றைக் கொண்டு, பரம்பரையாக செய்யக் கூடியவற்றை செய்யலாம்.
ராஜராஜேஸ்வரி சம்பூரணமாக ஸஹஸ்ரார கமலத்தில் பிரகாசிக்கும் லலிதா திரிபுரசுந்தரி ஆதலால் பலவித நைவேத்தியங்களை செய்து நிவேதிக்க வேண்டும். ஒவ்வொரு நைவேத்தியமும் தாதுபுஷ்டியை அளிக்கிறது. முக்கியமாக பூரணத்தோடு கூடிய சுழியன் என்ற இனிப்பு பதார்த்தத்தை இன்று நைவேத்தியம் செய்வது சிறப்பு.
அதேபோல் அனைத்துவித மலர்களும் இந்த பருவ காலத்தில் பூக்கும் அனைத்துவித புஷ்பங்களும், சுகந்தமான இலைகளும் அம்பிகைக்கு சமர்ப்பித்து வழிபடலாம்.