நவராத்திரி ஸ்பெஷல்: சித்திதாத்ரியின் சிறப்புகள்!

sidhithathri
sidhithathri

நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில்! 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

கேள்வி: நவதுர்கா வரிசையில் சித்திதாத்ரியின் சிறப்பு என்ன? சித்திதாத்ரியை எவ்விதம் வழிபட  வேண்டும்?

பதில்: ‘சித்த கந்தர்வ யக்ஷாத்யை அசுரைரமரைரபி சேவ்யமானா சதா பூயாத் சித்திதா சித்திதாயினி என்று வர்ணிக்கப்படுகிறாள்.

யாராயிருந்தாலும் பெற வேண்டும் என்று நினைப்பது செய்த செயல்களின் பலனையே! நாம் எந்த வேலை செய்தாலும் அதன் பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவோம்.

அதனால் ஒன்பது நாட்கள் வழிபட்ட பின் நாம் செய்த நவராத்திரி விரதம் பலன் அளிக்க வேண்டும் என்று கோருகிறோம்.

sidhithathri1
sidhithathri1

சித்திகளை (பலன்களை) பெறுவதற்காக வழிபடுகிறோம். யார் பலன் கொடுப்பார்கள்? விரத வடிவில் யாரை வழிபடுகிறோமோ அந்த தேவியே! அதனால் நமக்கு எது தேவையோ, எது யோக்கியமோ, எது மகிழ்வளிக்குமோ அப்படிப்பட்ட பலனை அளிக்கும் அம்பாள் ஆதலால் சித்திதாத்ரி என்றழைக்கப் படுகிறாள்.

 நாம் பார்க்கும் மனிதர்கள், நாம் பார்க்க முடியாத தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள் அனைவருக்கும் இந்த அம்பிகையே தாய். 

யாருக்கு எந்த செயலில் பலன் பெற வேண்டும் என்றாலும் இந்த தேவியை வழிபட்டுப் பலன் பெறவேண்டும்.

படைப்பில் ஒவ்வொரு செயலுக்கும் பலன் கொடுப்பவளும்  தவத்தை சித்தியடையச் செய்பவளும் சித்திதாத்ரியே. 

நாம் வழிபடும் போது பல தவறுகள் செய்வோம்.  செய்தவருக்கு செய்தபடி மட்டுமே பலன் கிடைக்கும் என்று கூறும் போது நமக்குத் தவறுகளே மிகுந்திருக்கும். ஆனால் சித்திதாத்ரியை தியானம் செய்து தெய்வார்ப்பண புத்தியோடு வழிபட்டால் அந்த தவறுகளை எல்லாம் நீக்கி சம்பூரணமாக பலன் அளிப்பவள் சித்திதாத்ரி.

 அதுமட்டுமல்ல. அஷ்டமா சித்திகளின் தாயும் இவளே! அணிமா மகிமா கரிமா லகிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்று எட்டு சித்திகள் உள்ளன. இவளே இந்திரன் முதலான தேவர்களுக்கு தெய்வீகத்தை அருளியவள்.

சிருஷ்டியில் எந்த வஸ்துவுக்கு எந்த குணம் உள்ளதோ அதுவே அதன் சித்தி. இவ்வாறு லட்சணங்கள் அனைத்தையும் ஏற்படுத்தியவள் ஆதலால் ‘சித்திதா சித்திதாயினி’ என்று போற்றப்படுகிறாள்.

சித்திதாத்ரியை வழிபடுவதன் மூலம் நம் ஆன்மிக சாதனைகள் பலனளிக்கின்றன. இந்த நவராத்திரி விரதத்தின் போது மட்டுமின்றி இனிமேலும் எந்த பணிபுரிந்தாலும் தர்மத்தோடு கூடிய செயல்கள் அனைத்தும் கட்டாயம் நிறைவேறும்படி செய்பவள் சித்திதாத்ரி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories